முடிவுக்கு வந்தாச்சு.. கூடிய குடும்பம்.! கண்ணீர் விட்ட செல்லம்மா நாயகி.! வைரல் வீடியோ!!



Chellamma shoot finished heroin anshitha cried video

விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு தொடருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த தொடர் செல்லம்மா. 

கடந்த மே 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தத் தொடரில் கதாநாயகியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக கண்மணி நடித்திருந்தார். 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் செல்லம்மா தொடரின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஷூட்டிங்கில் தொடரில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கதாநாயகி அன்ஷிதா சீரியல் முடிவதை எண்ணி அனைவரையும் பிரிவதற்காக எமோஷனலாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!


இதையும் படிங்க: Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!