"ப்ளீஸ் அண்ணா என்ன விட்டுருங்க..." வாயில் சானிட்டைசரை ஊற்றி.... 16 வயது சிறுமியை கதற கதற நாசம் செய்த கும்பல்.!:



16-year-old-girl-forced-to-drink-sanitizer-and-gang-rap

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது சகோதரருடன் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர்.

Indiaஅப்போது சிறுமி அவர்களிடமிருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த சானிடைசரை சிறுமியின் வாயில் ஊற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கம் அடைந்ததும் அவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த சிறுமியின் சகோதரனையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

Indiaஇதனைத் தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் சிறுமியையும் அவரது சகோதரனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.