ஜூனியர் மாணவர்களை ராக்கிங் பெயரில் அடித்து கொடுமைப்படுத்திய சீனியர்ஸ்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!!



Andhra Pradesh Palnadu College Senior Students Raging

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ராகிங் தொடர்பான புகார்கள் அவ்வப்போது எழுந்து வந்தன. 

இந்நிலையில், கல்லூரியில் தங்கியிருந்து மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள், முதல் ஆண்டு பயின்று வரும் மாணவர்களை தலைகுப்பற படுக்கவைக்கின்றனர். 

இதையும் படிங்க: போதை நாகராஜனை பதம்பார்த்த ஒரிஜினல் நாகராஜன்; குடிபோதையில் நடந்த சண்டை.. உயிருக்கு போராடும் நபர்.!

அலறித்துடித்த மாணவர்கள்

இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவர்களை ஆபாசமாக பேசி திட்டும் மாணவர்கள், முதல் ஆண்டு மாணவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்துகின்றனர். இதனால் வலிபொறுக்க இயலாத மாணவர்கள் அலறித்துடிக்கின்றனர். 

இக்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்ட 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களை தேடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!