#JustIN: அவசர ஊர்தியை இயக்கிய 17 வயது சிறுவன்; 2 பெண்கள் படுகாயம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!



cuddalore GH Ambulance Driven by 17 aged Boy 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று சிறிய ரக கார் ஆம்புலன்சில் நோயாளி ஒருவர் வந்துள்ளார். நோயாளியை அவசர ஊர்தியின் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். அவசர ஊர்தியில் சாவி இருந்துள்ளது. 

இந்நிலையில், அங்கிருந்த 17 வயது சிறுவன் ஒருவர், திடீரென ஆம்புலன்ஸை இயக்கி இருக்கிறார். இதனால் ஆம்புலன்ஸ் நகர்ந்து சென்று 2 பெண்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. 

இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!

சக்கரத்துடன் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண் படுகாயம்

இந்த விபத்தில் 2 பெண்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பெண்மணி லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்து சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: #கடலூர்: கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை; அலறித்துடித்த தொழிலாளி.!