அடக்கொடுமையே... கதற கதற கற்பழிக்கப்பட்ட மூதாட்டி... காமக்கொடூரன் வெறி செயல்.!!



elder-woman-brutally-raped-by-a-womanizer-shocks-telang

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிவக்குமார் என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை

தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவராக இருந்திருக்கிறார். இவர் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடிய விடிய பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி

இந்நிலையில் சிவக்குமார் வெங்கடாபுரம் பகுதியில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் மூதாட்டியை வீட்டில் அடைத்து வைத்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மூதாட்டி அவரிடம் கதறியும் விடாமல் மூதாட்டியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார் சிவக்குமார்.

India

இதையும் படிங்க: வாயில் துணியை வைத்து அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்... 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!!

கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்

இந்நிலையில் விடிந்ததும் மூதாட்டியின் வீட்டிலிருந்து சிவக்குமார் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து  நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் காமக்கொடூரன் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மூதாட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஷாக்கிங்... வங்கி பெண் ஊழியர் பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய ஓட்டுனர்... காவல்துறை நடவடிக்கை.!!