மாமியாரை கரம்பிடித்த மருமகள்; இது வேற லெவல் திருமணம்..! 3 ஆண்டு காதலால் கணவருக்கு டாட்டா.!



in Bihar Gopalganj Mother In Law Married Daughter in Law 

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டம், பெல்வா கிராமத்தை சேர்ந்த பெண்மணி சுமன். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கிறார்.இவரின் மருமகள் சோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் - மருமகள் இடையே இணக்கமான உறவு இருந்துள்ளது. நாளடைவில் இருந்த உறவு ஓரினசேர்கையாக மாறி, இருவரும் உயிருக்கு உயிராய் பழகி வந்துள்ளனர். 

மாமியார்-மருமகள் திருமணம்

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, உள்ளூரில் இருக்கும் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும், எதிர்ப்பு கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன.  

இதையும் படிங்க: காலையில் நடந்த காதல் திருமணம்.! மாலையில் துடிதுடித்து உயிரிழந்த மணப்பெண்.! நேர்ந்த விபரீதம்!!

ஏற்கனவே இந்தியாவில் தன்பாலின சேர்க்கை, சுயமாக பாலினத்தை மாற்றிக்கொள்ளுதல் போன்றவை குறித்த பல்வேறு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இதுநாள் வரை தன்னை மாற்று பாலினமாக உணர்ந்தவர்கள், தற்போது வெளிப்படையாக தன் பாலின நிலையை அறிவித்து தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த திருமணமும் நடைபெற்று இருக்கிறது.

இதையும் படிங்க: காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்.. நெகிழ்ச்சி சம்பவம்!