மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்; மீண்டும் கைது செய்யப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.!



delhi-cm-arvind-kejriwal-arrested-by-cbi-cops

 

டெல்லி மாநிலத்தில் நடந்த மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பலகட்ட முயற்சிக்கு பின்னர் அவருக்கு ஜாமின் கிடைக்கப்பெற்று வெளியே வந்தார். 

நாடாளுமன்ற கூட்டம்

அதனைத்தொடர்ந்து, தற்போது தேர்தலும் நடைபெற்று முடிந்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் முதலிய எதிர்க்கட்சிகள் பலகட்ட விஷயங்களை வைத்து அவைத்தொடரில் கேள்விகளை எழுப்ப முயற்சித்து வருகிறது. 

இதையும் படிங்க: YSR காங்கிரஸ்க்கு டாட்டா காட்டிய மக்கள்?.. ஆந்திராவில் வருகிறது ஆட்சி மாற்றம்?.!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

இந்நிலையில், டெல்லி மாநில முதல்வரின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரித்து உத்தரவிடப்பட்டு நிலையில், மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ அதிகாரிகளால் இன்று முறைப்படி கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: பரபரப்பு... ஆளுநரை சந்தித்த இபிஎஸ்.!! முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்.!!