#Breaking: முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. முதல்வர் நன்றி.!



PM Modi Permits Second Phase Metro Projects In Tamilnadu 

 

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேரில் சந்தித்து பல்வேறு திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்து வலியுறுத்தி இருந்தார். அதில் முக்கிய அம்சமாக இரண்டாம்கட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கான பணிகள் குறித்து வலியுறுத்தப்பட்டு இருந்தது.

பிரதமர் ஒப்புதல்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர், அதற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்த முதல்வரின் எக்ஸ் பக்கத்தில், "நன்றி, பிரதமர் நரேந்திர மோடி.. 

இதையும் படிங்க: வீட்டில் தனியே இருந்த மூதாட்டி மர்ம கொலை; திருப்பத்தூரில் அதிர்ச்சி.!

முதல்வர் நன்றி

உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது, எங்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ரிசப்சனில் ஓட்டம்பிடித்த மணமகனுடன் திடீர் கல்யாணம்; இப்படியும் காதல் திருமணம்?.. திருவள்ளூரில் சுவாரஷ்யம்.!