மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



TN Rain Update 23 May 2024 till 1 PM Report 

 

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாகி இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

மதியம் 1 மணிவரை மழை பெய்யும் மாவட்டங்கள்

இந்நிலையில், இன்று மதியம் 1 மணிவரையில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், 10 நாட்களாக பரவலாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கோடை மழை அதிககனமழையாகவும் பெய்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!