5 கோடி கொடுத்தாலும் அதுமட்டும் முடியாது!! கறாராக மறுத்த சாய்பல்லவி!! அதற்காண காரணம் என்னனு பார்த்தீங்களா...



actress-saai-pallavi-add

மலையாள படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.

சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ராகுல் சங்ரித்யன் இயக்கத்தில் நடிகர் நானியுடன் இணைந்து நடித்திருந்த ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Saai

இந்நிலையில் நடிகை  சாய் பல்லவிடம் சமீபத்தில் அழகு சாதன நிறுவனம் ஒன்று நீங்கள், எங்கள் விளம்பரத்தில் நடித்து கொடுத்தால் 2 கோடி தருகிறோம் என்று கூறியுள்ளனர். எல்லாவற்றையும் கேட்ட சாய்பல்லவி இறுதியில் இதில் எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று மறுத்துவிட்டாராம். கடைசியாக 3 கோடி வரை பேரம் பேசிய அவர்களிடம், நீங்கள் 5 கோடி கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் என்று  கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த  விளம்பரத்தில் அவர் நடிக்க  மறுத்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளாராம். எனது தங்கை கொஞ்சம் மாநிறமாக தான் இருப்பார். அவரிடம் நான், நீ காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட்டால் உனக்கு மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும் என்று கூறினேன். அதைக்கேட்ட அவர் தற்போது அளவுக்கு அதிகமாக  காய்கறிகள் , பழங்கள் சாப்பிட்டு வருகிறார்.

பொதுவாக நாம் யாரிடமாவது நீ அழகாக இல்லை என்று கூறினால் அந்த அழகை  பெறுவதற்காக அவர்கள் எவ்வளவு விலை வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி. ஆகையால் மக்களிடம் நான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் அதனை கொண்டு செல்ல விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.