கள்ளக்காதலியுடன் ஜல்சா... கணவரை கையும் களவுமாக பிடித்து, அடித்து நொறுக்கிய முன்னாள் அழகி..!



Andhra Vizag woman Beat Husband 

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நட்சத்திரா. இவர் மிஸ் வைசாக் முன்னாள் அழகி ஆவார். சில திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, இவர் தேஜா என்பவருடன் காதல் வயப்பட்ட நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த தம்பதிகள், பின் கருத்து வேறுபாடை சந்தித்தனர். 

விவாகரத்து வேண்டி விண்ணப்பம்

தம்பதிகளுக்கு 5 வயதுடைய மகள் இருக்கும் நிலையில், தேஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வந்த காரணத்தால் பல பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த நட்சத்திரா கணவருடன் சண்டையிட்டு விவகாரத்து கோரியுள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

இதையும் படிங்க: திருமணத்திற்கு ஆடை வாங்கிவரும்போது சோகம்; கார் - லாரி மோதி 2 குழந்தைகள், மணமகன் உட்பட 5 பேர் பரிதாப பலி.!

கணவருக்கு தர்ம அடி

இதனிடையே, தேஜா வேறொரு பெண்ணுடன் திரைப்பட தயாரிப்பு அலுவலகம் ஒன்றில் உல்லாசமாக இருக்க, ஊடகத்தினரை அழைத்துக்கொண்ட பெண்மணி தேஜாவை கையும் களவுமாக பிடிக்க முடிவெடுத்தார். அங்கு நட்சத்திரா சென்றபோது உல்லாசத்திற்கு தயார் நிலையில் இருந்த ஜோடி பிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் புகாரை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கின்றனர். 

முன்னாள் கடற்படை ஊழியரான தேஜா, திருமணத்திற்கு பின் பப்ஜி கேமுக்கு அடிமையாகி இருக்கிறார். பணியின்போது அவர் பப்ஜிகேம் விளையாடி அலட்சியமாக இருந்ததால் பணிஇடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.  

இதையும் படிங்க: "சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்" - 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!