#Video: 8 பேர் கும்பலால் புதுமணப்பெண் கணவர் கண்முன் பலாத்காரம்; கோவிலுக்கு சென்றபோது துயரம்..! 



in Madhya Pradesh Rewa new Married wife Gang Raped 

 

புதுமணத்தம்பதி கோவிலுக்குச் சென்ற நிலையில், அங்கு கணவரை மரத்தில் கட்டிப்போட்டு, அவரின் கண்முன் 8 பேர் கும்பல் மனைவியிடம் அத்துமீறிய பயங்கரம் நடந்துள்ளது.

கணவன் கண்முன் கொடுமை

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டம், பைரவ பாபா கோவிலுக்கு கடந்த அக்.21ம் தேதி புதுமணத்தம்பதி சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளது. அப்போது, அங்கு இருந்த 8 க்கும் இளைஞர்கள் மேற்பட்ட கும்பல், கணவரை கட்டிப்போட்டு அவரின் கண்முன் மனைவியை பலாத்காரம் செய்துள்ளது.

இதையும் படிங்க: முகத்தில் ஆசிட் காயங்களுடன் அரை நிர்வாண உடல்.!! மீண்டும் கூட்டு வன்புணர்வா.? முடுக்கி விடப்பட்ட விசாரணை.!!

வீடியோ எடுத்து மிரட்டல்

கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றிய கும்பல், அதனை வீடியோவும் எடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து வெளியே கூறினால், சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக எடுத்து வைத்துள்ள வீடீயோவை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி இருக்கிறது. 

gang rape

8 பேரின் மீது வழக்குப்பதிவு

இதனால் பயந்துபோன தம்பதி கலங்கிப்போய் வீடு திரும்பிய நிலையில், மறுநாள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற கூர்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகள் 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் தனிமையான இடத்திற்கு சென்ற இளம்பெண்.. 3 பேர் கும்பலால் பலாத்காரம்.!