பெண்ணின் கைவிரலை நள்ளிரவில் கடித்த இளைஞர் அடித்துக் கொலை.. துள்ளத்துடிக்க அரங்கேறிய பயங்கரம்.!



in Uttar Pradesh Sahranpur Man Kills by 2 following this Reason 

 

நள்ளிரவு நேரத்தில் திருட்டுத்தனமாக கூடாரத்திற்குள் நுழைந்து பெண்ணின் கையை இளைஞர் கடித்த நிலையில், அவர் விழித்ததால் இரண்டு பேரால் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர், பெஹாட்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம், அரைநிர்வாண நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க: சிறுநீர் கலந்து சப்பாத்தி: முதலாளி குடும்பத்தை பழிவாங்க பணிப்பெண் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன குடும்பம்.!

இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பஹோல்புர் பகுதியில் பிரோஸ், முஸ்தபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஷிகாம்பரி தேவி வனப்பகுதியில் வசித்து வருகின்றனர். கூடாரம் அமைத்து இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 

Uttar pradesh

தாக்குதலில் இளைஞர் பலி

இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 01:30 மையளவில் இளைஞர் ஒருவன் கூடாரத்திற்குள் நுழைந்து, உறங்கிக்கொண்டு இருந்த பெண்ணின் விரலை வாயில் வைத்து கண்டித்துள்ளார். இதனால் அவரை அலறவே, பதறி எழுந்த குடும்பத்தினர் இளைஞரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். 

பிரோஸ், முஸ்தபா சேர்ந்து இளைஞனை மயக்க நிலைக்கு செல்லும் வரை தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தை காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!