மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட காய்கறிகள்; ஆர்வமாக சேகரித்த பொதுமக்கள்.. சந்தைக்குள் சம்பவம்.!



in Vegetables washed away by the rain in a Rythu Bazar in Hyderabad

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டம், ரித்து பஜார் பகுதியில் காய்கறி கடைகள் செய்யப்பட்டு வருகின்றன. அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பலரும் அங்கு சென்று வீடு, ஹோட்டல்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். 

தற்போது தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருப்பதால், இந்தியா முழுவதும் பெய்து வரும் மழை ஹைத்ராபாத்தையும் புரட்டி எடுத்து வருகிறது. நகரின் சில பகுதிகளை அவ்வப்போது மழை நீர் சூழ்ந்து விடுகிறது. 

இதையும் படிங்க: ஆன்லைனில் வேலை தேடி நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

காய்கறிகளை சேகரித்த பொதுமக்கள்

இதனிடையே, சம்பவத்தன்றும் அதேபோல மழை பெய்த நிலையில், ரித்து பஜாரில் தரையோடு தரையாக அமைக்கப்பட்டு இருந்த காய்கறி கடைகளில் இருந்த சில காய்கறிகளை நீர் அடித்து வந்தது. இதனைக்கண்ட சிலர், ஆர்வமாக நீரில் வந்த காய்கறிகளை தங்களின் கைப்பையில் சேகரித்தனர்.

இதையும் படிங்க: அதிவேகத்தில் காரை இயக்கிய 19 வயது இளைஞர்; விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்.. பரிதாப பலி.!