நீச்சல் குளத்தில் சாகசம்; இளைஞரின் உயிரைப்பறித்த அலட்சியம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!



Madhya Pradesh Swimming Pool Stunt Killed Youth 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரட்லம் பகுதியை சேர்ந்தவர் அங்கித் திவாரி (வயது 18). கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கித் அங்குள்ள டால்பின் நீச்சல் குளத்திற்கு சென்று குளித்துக்கொண்டு இருந்தார். 

அவரின் நீரினுள் மூழ்கி மறுபுறத்திற்கு வந்து எழ முயற்சித்தபோது, அங்கு நீச்சலடிக்க வந்த இளைஞர் ஒருவர் பாய்ந்து நீருக்குள் குதித்தார். அச்சமயம் வெளியே எழ முயன்ற அங்கித்தின் தலையில் அடிபட்டுள்ளது. 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!

சாகசம் செய்த இளைஞரால் அப்பாவி பலி

இதனால் மயங்கியவரை மீட்ட பொதுமக்கள், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அங்கித் திவாரியின் உயிரிழப்பை உறுதி செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நீச்சல் குளத்தில் சாகசம் செய்த இளைஞரால் பறிபோன உயிர் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றன. 

இதையும் படிங்க: "தலைகீழாகத்தான் குதிப்பேன்" - கவுண்டமணி பாணியில் 100 அடி ஆழ குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் சாவு.. ரீல்ஸ் மோகம் உயிர்பறித்தது.!