"என் பேச்சை மீறி கள்ள உறவு கேக்குதோ.." மனைவி கொடூர படுகொலை.!! சரணடைந்த கணவன்.!!



man-murder-his-wife-for-suspicious-about-her-illegal-af

உத்திரபிரதேச மாநிலத்தில் கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரணடைந்த கணவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மகன்களுடன் போலீசில் சரணடைந்த கணவன்

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த சோனு என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 3 மகன்களுடன் காவல் நிலையம் சென்று தன்னை கைது செய்யுமாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

India

பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த அவரது மனைவி ராக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சோனு மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரிடம் விசாரணையை தொடங்கியது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! சடலமாக மீட்பு.!! 50 வயது நபருக்கு வலை.!!

பதற வைத்த ஒப்புதல் வாக்குமூலம்

காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த சோனு தனது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவரிடம் கள்ளக்காதலை கைவிட்டு விடுமாறு தெரிவித்த பின்பும் தொடர்ந்து உறவில் நீடித்ததால் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் காவல்துறையையே பதற வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: விபூதி அடித்த காதலன்... தட்டி கேட்ட மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!