பள்ளிக்குச்சென்று படிக்க வற்புறுத்தியதால் துயரம்; தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த 15 வயது சிறுவன்.! 



Virudhunagar Sathur 15 Aged Boy Suicide 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், குருவிலங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர் வனராஜன் (வயது 45). இவருக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மகன் லோகன் (15), சாத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

தந்தை-மகன் வாக்குவாதம்

இதனிடையே, படிப்பில் நாட்டமில்லாத லோகன், சரிவர படிக்க பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மகனை தந்தை அவ்வப்போது கண்டித்து இருக்கிறார். இதனிடையே, நேற்றும் மகனை தந்தை வனராஜன் கண்டித்து இருக்கிறார். இதனால் லோகன் தந்தையிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். 

சிறுவன் தற்கொலை

பின் கோபமடைந்து வீட்டில் உள்ள அறையை உட்புறமாக தாழிட்டுக்கொண்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், லோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: மீளா துயரம் ... ஆசையாக வளர்த்த மகள் செய்த துரோகம்.!! தந்தையின் பரிதாப முடிவு.!

மேலும், இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பதற வைக்கும் தகவல்... இறந்த தாய் உடலுடன் பூஜை செய்த மகன்.!! இறுதியில் எடுத்த விபரீத முடிவு.!!