பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
30 நாட்களில் திருமணம்.. 20 வயது இளம்பெண்ணின் மர்ம மரணம்.. கைகள் கட்டப்பட்டு மரத்தில் தொங்கிய சடலம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளியா மாவட்டம், நகரா கிராமத்தில், 20 வயதுடைய பூஜா சௌகான் என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏப்ரல் மாதம் 25ம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமண ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் விறுவிறுப்புடன் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று பூஜா தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.
அவரின் கைகள் கட்டப்பட்ட நிலையில், பூஜாவின் சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண் பலாத்கார முயற்சி & கொலை.. ஆட்டோ ஓட்டுநர் என்கவுண்டரில் பலி.!
மர்ம மரணம்
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டு சடலமாக தொங்கவிடப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் காண்பித்து எஸ்.ஐ அதிர்ச்சி செயல்.!