உல்லாசத்தில் தகராறு... நிர்வாணமாக தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி.!! கேரள பெண் ருத்ரதாண்டவம்.!!



admk-member-stripped-and-attacked-by-kerala-woman-over

கேரளாவைச் சேர்ந்த பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள பெண்ணுடன் தொடர்பு

அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி, நாகர்கோவில் அதிமுக தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த மூத்த நிர்வாகிக்கும் கேரளாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் நட்பாக அமைந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

tamilnadu

குடோனிற்கு அழைத்து உல்லாசம்

அந்த நிர்வாகிக்கு சொந்தமான குடோன் ஒன்று நாகர்கோவிலில் அமைந்திருக்கிறது. அதிமுக நிர்வாகி கேரளாவைச் சேர்ந்த தனது கள்ளக்காதலியை அடிக்கடி குடோனிற்கு அழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணிற்கு பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. அந்தப் பெண்ணை அழைத்து உல்லாசம் அனுபவிப்பதற்காக தனது குடோனில் இருக்கும் அறையை லாட்ஜ் போல பயன்படுத்தி வந்திருக்கிறார் அதிமுக நிர்வாகி.

இதையும் படிங்க: தொடர் பாலியல் வன்புணர்வால் கர்ப்பமான சிறுமி... அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம் .!!

நிர்வாணமாக்கப்பட்டு தாக்குதல்

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது கள்ளக்காதலியை கேரளாவில் இருந்து வரவழைத்திருக்கிறார் அதிமுக நிர்வாகி. மேலும் குடோனில் வைத்து அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்த முறை தனது கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்கவில்லை. மேலும் அங்கிருந்த தனது நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி அந்தப் பெண்ணை தாக்கி இருக்கிறார். இதில் கோபமடைந்த அந்தப் பெண் அதிமுக நிர்வாகியை கடுமையாக தாக்கியதோடு அவரது ஆடைகளை கலைத்து நிர்வாணமாக தாக்கி இருக்கிறார். அந்தப் பெண்ணின் தாக்குதலை எதிர்பார்க்காத அதிமுக நிர்வாகி நிர்வாணமாக வீட்டிற்குள் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: சமைக்கலயான்னு கேட்டது ஒரு குத்தமாயா .." கழுத்தறுக்கப்பட்டு கணவன் படுகொலை.!! மனைவி வெறி செயல்.!!