காதல் கணவனுக்கு கம்பி நீட்டிய மனைவி.. 18 லட்சம் பணம்.. 15 சவரன் நகையுடன் ஓட்டம்.. 3 பிள்ளைகளை தவிப்பு.!



an wife escape with money and jewel in kanniyakumari

காதல் திருமணம் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்களை பகுதிக்கு அருகில் ஒரு பெண் தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் காதல் கணவரை கைவிட்டு விட்டு 15 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். நிஷா என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Kanniyakumari

கடன் சுமை :
இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். விபின் அதிகப்படியாக கடன் சுமை தாங்காமல் தவித்து கொண்டுள்ளார். எனவே, அவர்களது வீட்டை விற்று விபின் 18 லட்சம் திரட்டி இருக்கிறார். 

இதையும் படிங்க: தனியாக இருந்த பெண்ணின் வாயை பொத்தி மர்ம நபர்கள் செய்த கொடூர சம்பவம்!

Kanniyakumari

பணத்துடன் தலைமறைவு :
கடனை அடைப்பதற்காக அந்த பணத்தை அவர் திரட்டிய நிலையில் மனைவி நிஷா அந்த பணத்தை யாரிடமும் சொல்லாமல் எடுத்துக்கொண்டு 15 சவரன் தங்க நகையுடன் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து, கணவர் விபின் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நிஷாவை தேடி வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இதையும் படிங்க: அக்காவிடம் தகராறு செய்த மாமனை அறிவாளால் வெட்டிய 15 வயது சிறுவன்!