சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
தளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல்! நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனை!

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்தது
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் அந்த தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது