அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.3.91 இலட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய நாம் தமிழர் கட்சி பிரமுகர்.!



Erode NTK Supporeter Govt Job Forgery Scam 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவரின் மகன் கோகுல் (வயது 27). நண்பர் சக்திவேலின் மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர்கள் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். 

இருவரும், ஈரோடு நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி, சூலை மல்லிகை நகரை சேர்ந்தவர் தமிழ்வாணன் ஆகியோர் வனத்துறை வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்ததைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019 பிப்ரவரி வரை ரூ.3.91 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். 

தற்போதுவரை வேலை வாங்கித்தராத நிலையில், பணத்தை திரும்பி கேட்டபோது ரூ.1.30 இலட்சம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை ரூ.2.61 இலட்சம் வரவில்லை. அதனை கேட்டபோது தரமுடியாது என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இருவரும் தங்களின் பணத்தை மீட்டுத்தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.