கொதிக்ககொதிக்க கூழ் காய்ச்சிய அண்டாவில் விழுந்து பரிதாபமாக பலியான இளைஞர்.! நடந்தது என்ன? வைரலாகும் பகீர் வீடியோ.!



man-fall-into-the-boiling-vessels-and-dead

மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டு இளைஞர் அண்டாவில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையன்று பல்வேறு சிறப்புப் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது அங்கு பெரிய பெரிய அண்டாவில் கூழ் காய்ச்சும் பணிகளும் நடைபெற்றுள்ளது.

அப்பொழுது அங்கு கூழ் காய்ச்சி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தடுமாறிய அந்த நபர் கொதித்துகொண்டிருந்த கூழ் அண்டாவிற்குள் விழுந்துள்ளார். இதை கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் ஓடி வந்து மிகவும் சிரமப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை அண்டாவிற்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கொதிக்கும் கூழில் விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த வாலிபர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நபர் அண்டாவிற்குள் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை பதற வைக்கிறது.