திருமணமான 45 நாளில் நடந்த சோகம்.!! கணவன் கண் முன்னே துடிதுடித்து பலி.!!



newly-married-woman-died-in-road-accident-police-enquir

சென்னை அருகே புதிதாக திருமணமான இளம் பெண் சாலை விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமண தம்பதிகள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா. இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை சூரிய நாராயணா நகரை சேர்ந்த விஸ்வ பிரியா என்பவருக்கும் 45 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரது மணவாழ்க்கையும் சுமுகமாக சென்று கொண்டிருந்தது.

tamilnadu

கணவர் கண் முன்னே துடிதுடித்து பலி

இந்நிலையில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மாலை விஷ்வ பிரியா, கணவர் நாகார்ஜுனாவுடன் தனது தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார். வாகனத்தை நாகார்ஜுனா ஓட்ட விஸ்வபிரியா பின்னால் அமர்ந்திருக்கிறார். இந்நிலையில் இவர்கள் சென்ற வாகனம் குருவ ராஜா சந்திப்பு சாலையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஷ்வ பிரியாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை  ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற போது வழியிலேயே கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: குடிகார கணவன்... கள்ளக்காதலுடன் சேர்ந்து எமலோகம் அனுப்பிய மனைவி.!!

காவல்துறை விசாரணை

இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக திருமணமான பெண் சாலை விபத்தில் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கொலையில் முடிந்த தகராறு... வெட்டி சாயக்கப்பட்ட கட்டிட தொழிலாளி.!! தந்தை, மகன்கள் கைது.!!