பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
சீதாராமம் பட நடிகையின் அசர வைக்கும் புகைப்படங்கள்..

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் மிருணாள் தாகூர். இவர் தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் இந்திய ரசிகர்களையே கவர்ந்தவர் மிருணாள் தாகூர்.
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான 'லவ் சோனியா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மிருணாள் தாகூர். இப்படத்திற்கு பின்பு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது வாழ்க்கையை ஆரம்பித்து வெள்ளித்திரை வரை கதாநாயகியாக தனது நடிப்பு திறமையால் முன்னேறி இருக்கிறார். மேலும் தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார் மிருணாள் தாகூர்.
இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோஸ் செய்து வருகிறார். தற்போது மாதலழகியாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.