இறுதிச்சடங்கிற்கு சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி.! சோகத்தில் குடும்பத்தினர்.!!



MP Agar Malwa 3 Children Drowned Sea 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அகர்மால்வ் மாவட்டம், நல்கேடா பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர், அங்குள்ள லகுந்தர் நதிக்கு உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். 

நீரில் மூழ்கி பலி

அங்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், அனைவரும் நதியில் குளித்துள்ளனர். அச்சமயம், இவர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த சிறுமிகள் மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: வேரோடு சாய்ந்த மரம்; மனைவி கண்முன் கணவன் பலி.! சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.!

தகவல் அறிந்த மீட்பு படையினர் மோனு (7), முஸ்கான் (8), பங்கஜ் (7) ஆகியோரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.!