11 வயது சிறுவனை கடுமையாக தாக்கிய தாய்; பதறவைக்கும் சம்பவம்.. குடும்ப சண்டையில் கொடூரம்.!



Uttar Pradesh Faridabad mother Beaten hardly 11 Aged Son 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரிதாபத் மாவட்டம், சூரஜ்குந் பகுதியில் வசித்து வரும் மருத்துவ தம்பதிக்கு 11 வயதுடைய மகன் இருக்கிறார். தம்பதிகள் இருவரும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

மகனை கடுமையாக தாக்கிய தாய்

தம்பதிகளுக்கு இடையே சமீபகாலமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது குடும்பத்தில் சண்டை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், 11 வயது மகனை தாய் கடுமையாக தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: லாரி மீது மோதி அப்பளம்போல நொறுங்கிய டெம்போ.. 6 பேரின் உயிரை குடித்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!

இதனால் தனது மகனை பாதுகாக்க தந்தை வீட்டில் மறைமுக கண்காணிப்பு சிசிடிவி கேமிரா வைத்துள்ளார். அதில் சிறுவனுக்கு நடக்கும் கொடுமைகள் பதிவாகி இருக்கின்றன. தற்போது இந்த விடீயோவின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!