#Breaking: பெண் ஒருவருடன் தனிமையில் முன்னாள் அமைச்சர்? இணையத்தில் லீக்கான போட்டோ.. பரபரப்புக்கும் அரசியல்களம்..!



former-minister-and-politician-with-girl-pic-viral-on-s

 

தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், தமிழ்நாட்டுக்கே தினமும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் துறையையும் கையில் வைத்திருந்த அமைச்சர் ஒருவர், சமீபத்தில் அவரின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

சட்டப்பேரவையும், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் போதெல்லாம், முதல்வரை புகழ்ந்துபேசி, பிரதமரை இகழ்ந்து பேசும் நபராகவும் அவர் இருந்து வந்தார். தெற்கில் உள்ள ஒரு மாவட்டத்தில் அமைந்த தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானவர், அமைச்சராக பணியை மேற்கொண்டு வந்தார். 

இதையும் படிங்க: #Breaking: த.வெ.க-வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; தொண்டர்கள் கொண்டாட்டம்.. அதிகாரபூர்வ ஆறிவிப்பு.!

அந்தரங்க போட்டோ லீக் 

இதனிடையே, அவர் சரிவர பணிகளை மேற்கொள்ளமால், துறையை எதிர்பார்த்த அளவு வெற்றிப்பாதைக்கு எடுத்துச்செல்லாமல் இருந்ததால், அவரின் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த முன்னாள் அமைச்சரின் அந்தரங்க போட்டோ ஒன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

politics

வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருப்பது அவர்தானா? அல்லது ஏஐ கொண்டு எடிட் செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை. இருப்பினும், முன்னாள் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் அதனை வைரலாக பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரமும் இல்லை. 

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல அரசியல் புள்ளிகள் முதல் தொழிலதிபர்கள் வரை இவ்வாறான சர்ச்சையில் சிக்கியது உண்டு. ஆனால்,அவை பெரிய அளவிலான விசாரணையை சந்தித்தது இல்லை. அதுபோல இதுவும் காலத்தால் கடந்துபோகலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!

எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி, நேரடியாகவோ மறைமுகமாகவோ இவ்வாறான அரசியல் புள்ளிகளின் அந்தரங்க புகைப்படங்கள் என கிடைப்பதை பகிர்ந்தால், அது சட்டப்படி குற்றம் என்பதையும் அதனை பகிருவோர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்.