கள்ளக்காதல் வயப்பட்ட மாமியாரை மணமுடித்த மருமகன்; ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் டும்., டும்., டும்.!



Bihar Saran District Son in Law Married Mother In Law 

 

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டம், ஹீரமோடி கிராமத்தில் வசித்து வருபவர் கீதா தேவி (வயது 55). இவரின் மருமகன் சிக்கந்தர் யாதவ் (வயது 30). 

மாமியார் - மருமகன் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்ததாக தெரியவருகிறது. ஒருகட்டத்தில் இந்த விஷயம் குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது. 

இதனையடுத்து, அவர்கள் ஊர் பஞ்சாயத்திடம் முறையிட, பஞ்சாயத்து தரப்பு விசாரணை நடத்தி மாமியாருக்கும் - மருமகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்கா காவல் நிலையத்தில் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பு புகாரும் வராத காரணத்தால் விசாரணை நடத்தப்படவில்லை என கூறினார்.