வந்தே பாரத் இரயில் கண்ணாடிகளை சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞர்; பகீர் வீடியோ வைரல்.!



 Vande Bharat Train Glass Broken by Hammer 

இந்திய இரயில்வே துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக கவனிக்கப்படும் இரயில்வே, புத்துயிர் பெற்று வருகிறது. 

தொடரும் தாக்குதல்

பயணிகளின் விரைந்த மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ, வந்தே பாரத் இரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புல்லட் இரயில் வழித்தடமும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனிடையே, ஆங்காங்கே வந்தே பாரத் இரயில் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: புக்கிங்கை கேன்சல் செய்ததால் ஆத்திரம்; பெண்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. பட்டப்பகலில் அதிர்ச்சி.!

வந்தே பாரத் இரயில் கண்ணாடி உடைப்பு

ஒருசில இடங்களில் இரயில்களை கவிழ்க்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், இளைஞர் ஒருவர் வந்தே பாரத் இரயில் கண்ணாடியை சுத்தியல் கொண்டு சேதப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக மட்டும் தெரியவரும் நிலையில், எங்கு? என்ற விபரம் இல்லை. இந்த விடீயோவின் பேரில், இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பசுவைக்கூட விட்டுவைக்கல.. பசுவை பலாத்காரம் செய்த 50 வயது வழக்கறிஞர்.!!