நா.த.க - திமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை; உண்மையை போட்டுடைத்த சீமான்.. பரபரப்பு தகவல்கள்.!



seeman about DMK NTK Alliance 

தமிழ்நாடு அரசு வீடு மற்றும் வணிக உபயோகத்திற்காக மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

tamilnadu politics

முருகன் மீது திடீர் பாசம் ஏன்?

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்களிடையே உரையாற்றினார். அவர் பேசுகையில், "தமிழ்நாடு திமுக அரசுக்கு திடீரென முருகனின் மீது எப்படி பாசம் வந்தது?. நான் அப்பன் முருகன் குறித்து பேசும்போது கலாய்த்தார்கள். 

இதையும் படிங்க: கொலை வழக்கில் சிக்கி ஜாமினில் வந்த அதிமுக பிரமுகர் கொடூர கொலை.. பழிக்குப்பழியாக பயங்கரம்.!

tamilnadu politics

எதற்காக கூட்டணி பேச்சு?

நான் தமிழ் தேசிய பேசும்போது, இன ரீதியான பாகுபாடு செய்வதாக கூறினார்கள். முருகனுக்கு பழனியில் அரசு எடுத்துள்ள விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், 20 நிமிடங்கள் முருகன் குறித்து எந்த விதமான பேப்பரையும் பார்க்காமல் பேச வேண்டும். இவ்வுளவு எதிர்ப்பை கொண்டவர்கள், எதற்கு என்னிடம் கூட்டணி பேச வந்தீர்கள்?" என கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: பகுஜன் சமாஜ்வாதி தமிழ்நாடு தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; அடுத்த அதிரடி கைது.!