பெண்களின் ஆடைகள் டார்கெட்.. நள்ளிரவில் அதிர்ச்சி தந்த ஆசாமி; சிசிடிவியால் அம்பலமான உண்மை.!



In Vellore Katpadi Woman Dress Stolen by Man 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில், சமீபகாலமாக வீட்டிற்கு வெளியே காயவைக்கப்படும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள் போன்றவை அவ்வப்போது மாயமாகி வந்தன. 

இந்த விஷயம் குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, மாயமான துணிகள் குறித்த மர்மம் விலகி இருக்கிறது.

இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!

வீடியோ நன்றி Polimer News

அதாவது, நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ்த்தளத்தில் இருக்கும் துணிகளை குறிவைத்து ஆசாமி ஒருவன் அதனை எடுத்துச்செல்லும் சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. 

இதனையடுத்து, விடீயோவின் பேரில் சர்ச்சைக்குரிய ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளதைத்தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!