பாயசம் எங்கடா?.. சவுண்ட் காட்டிய வேலை; கடுப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள்.! 



bigg-boss-tamil-8-payasam-issue-on-soundarya

 

பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 13 வது நாள் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று எலிமினேஷன் காரணமாக போட்டியாளர்கள் கடும் பரபரப்பில் இருந்தனர். 

எலிமினேஷன் லிஸ்டில் இருந்தவர்கள் யார் வெளியே சொல்லப்போகிறார்கள் என பரபரப்பில் இருந்தனர். இந்த வாரம் டாஸ்கில் வெற்றிபெற்று பெண்கள் அணி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்தது. 

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!

முட்டைக்கும், தொடுகறிக்கும் சண்டை

அதே நேரத்தில் ஆண்கள் அணி சர்க்கரை இல்லாமல் இந்த வாரத்தை கடத்தி இருந்தது. இதனிடையே, வெள்ளிக்கிழமை கூடுதலாக தொடுக்கறி கேட்டு சாச்சனா பிரச்சனை செய்திருந்தார். அதனை பயன்படுத்தி முட்டை கேட்டு தர்ஷா பேசி இருந்தார். 

ஒரேயொரு ட்விட் .. சவுந்தர்யா பேரு, புகழ் குளோஸ் 

 

இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், சவுந்தர்யா உணவு தேவைப்பட்டால்  யாரிடமும் கேட்காமல் எடுத்து சாப்பிட வேண்டும் என தர்ஷா மற்றும் சாச்சனாவுக்கு தொடுகறியை இறுதியாக ஊட்டி இருந்தார். இதுதொடர்பாக விஜய் சேதுபதி முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

பாயசம் பிரச்சனை 

 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று பாயசம் வைக்கப்பட்டு இருந்ததை யாரிடமும் கேட்காமல் சவுந்தர்யா சாப்பிட்டு இருக்கிறார். இந்த விஷயம் சுனிதாவிடம் கேள்வியாக சவுந்தர்யாவிடம் விவாதிக்கப்பட்டாலும், சவுந்தர்யா தனது செயல்பாடுகளை ஒப்புக்கொள்ளாமல் எதிர் விவாதம் செய்தார். இது கவனத்தை பெற்றுள்ளது. 

நடிகர் சிங்கம்புலி காமெடி ஒன்றில் பாயசம் எங்கடா? என பந்தியில் இருந்து கேள்வி எழுப்புவார், அதுபோன்ற சம்பவமாக இதுவும் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: "அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!