ஜெட் வேகத்தில் டூவீலரில் பயணம்.. சாலையோர டிவைடர் நெஞ்சில் சொருகி இளைஞர் பரிதாப பலி.!



in Uttar Pradesh Ghaziabad Two Wheeler Accident Youth Died 

அதிவேகம் என்றுமே ஆபத்தை தரும் என்பதற்கு உதாரணமாக ஒவ்வொரு நாளும் ஒரு துயர மரணம் ஏற்படுகிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், கோவிந்தபுரம், சி.என்.சி பம்ப் மெயின் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 இளைஞர்கள் அதிவேகத்தில் வந்தனர். அச்சமயம், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த இரும்பு பாதுகாப்பு தடுப்பின் மீது மோதியது. வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர், தடுப்பு கம்பிகளின் மீது விழுந்ததில் நெஞ்சில் கம்பிகள் சில இஞ்ச் வரை பாய்ந்தது. 

இளைஞர் பரிதாப பலி

இதனால் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். நேற்று மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இவர்களின் மரணத்திற்கான ஆதாரமாக, அதிவேகம் மற்றும் இரும்பு கம்பி அமைப்பு ஆகியவை இருந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த நபர், கோவிந்தபுரம் இ-பிளாக் பகுதியை சேர்ந்த சிவம் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: தறிகெட்டு காரை இயக்கிய எம்.எல்.ஏ மருமகன்; 19 வயது இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!

அதிவேகம் உயிர் பறிப்புக்கு காரணமாக அமைந்தது

இவரின் நண்பர் மோன்ட்டு என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவரின் குடும்பத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் அதிவேகத்தில் பயணம் செய்ததே விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது என விபத்தை நேரில் கண்ட ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் கூறினார். 

இதையும் படிங்க: ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!