அடக்கொடுமையே... 8-ம் வகுப்பு மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! மீன் வியாபாரி கைது.!!

பாண்டிச்சேரியில் காதலிப்பதாக கூறி 2 பள்ளி மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 2 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான மாணவிகள்
கடந்த 2ம் தேதி புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகேயுள்ள சோலை நகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தனது தோழியுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் மாணவி மற்றும் அவரது தோழி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையிடம் புகாரளித்தனர். இவர்களது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது தோழியை கண்டுபிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு
மீட்கப்பட்ட மாணவிகளிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடற்கரைக்கு அழைத்துச் சென்ற 2 நபர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து மாணவிகளை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: அட பாவமே... "இந்த மழலைய கொல்ல எப்படி மனசு வந்துச்சி..." 3 மாத குழந்தை கொலை.!! தாய் வெறி செயல்.!!
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
இது தொடர்பாக மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி வைத்திக்குப்பத்தை புஷ்பராஜ் மற்றும் மணிமாறன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்களில் புஷ்பராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். மணிமாறன் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 4 நபர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடடே... இனி ஆதார் கார்டுக்கு குட்பை.!! புதிய செயலியை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.!! அட்டகாசமான சிறப்பம்சங்கள்.!!