சென்னையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மளிகைகடை இளைஞர்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!



grocery shop boy made pergnant of 15 year old girl

சென்னை துரைப்பாக்கத்தில் மளிகை கடையில் வேலை பார்க்கும் இளைஞன் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பெரும் குடியைச் சேர்ந்த தியாகராஜன் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு வயது 24. அதே பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 15 வயது மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

15 year girl got pregnant

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அந்த 15 வயது சிறுமி தியாகராஜன் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் தியாகராஜனும் அந்த சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கி உள்ளனர்.

சிறுமியிடம் நெருங்கி பழகிய தியாகராஜன் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். திருமண ஆசை காட்டிய தியாகராஜன் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

15 year girl got pregnant

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவளின் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளின் பெற்றோர் இதற்கு யார் காரணம் என்று சிறுமியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மளிகை கடையில் வேலை பார்க்கும் தியாகராஜன் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.