போதை ஊசி செலுத்திய சில நிமிடங்களில் 17 வயது சிறுவன் பலி.! சென்னையில் பகீர்.!!



Chennai Pulianthope Youth Died After Drug Injection 

 

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன், போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கத்தை கொண்டு இருந்துள்ளார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசியை எடுத்துள்ளார். 

போதை ஊசி

சிறிது நேரத்திற்கு பின் சிறுவன் மயங்கிவிட, அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்; சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!

drug

சிறுவன் மரணம்

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி போதை ஊசி.! இளைஞருக்கு ஊர்மக்கள் கொடுத்த தண்டனையால் பரபரப்பு!!