ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அந்தோ பரிதாபம்.. போதை நபரின் ஆணுறுப்பில் நட்டு சொருகிய ஆசாமிகள்.!

கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கன்ஜங்காடு பகுதியில் 46 வயதுடையவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று போதையில் படுத்து உறங்கினார். உறங்குவதற்கு முன்பு, வீதியில் சென்றவர்களிடம் வம்பிழுத்ததாகவும் தெரியவருகிறது.
ஆணுறுப்பில் நட்டு
மறுநாள் காலையில் நபர் எழுந்தபோது, அவரின் ஆணுறுப்பில் கடும் வலி தென்பட்டுள்ளது. இதனால் அவர் அந்தரங்க உறுப்பை பார்க்கையில், அதில் நட்டு இருந்துள்ளது. வீட்டுக்கு சென்றவர், அதனை வெளியே எடுக்க முற்பட்டுள்ளார். ஆனால், பலன் இல்லை.
இதையும் படிங்க: ஜோதிடரை நிர்வாணமாக்கி ரௌடி செய்த இழிசெயல்.. திடீரென என்ட்ரி கொடுத்த போலீஸ்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.!
மருத்துவமனையில் கைவிட்டனர்
வெளியே சொன்னால் வெட்கக்கேடு என நினைத்தவர், 2 நாட்களாக சிறுநீர் கூட கழிக்க இயலாமல் அவதிப்பட்டுள்ளார். பின் வயிற்று வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனை சென்று விபரத்தை கூறியுள்ளார். அதிர்ந்துபோன மருத்துவர்கள், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
தீயணைப்பு படையினர் உதவி
எனினும், அவரின் ஆணுறுப்பில் சிக்கிய நட்டை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் சிறப்பு கட்டிங் பிளேடு கொண்டு நட்டை எடுத்தனர். மேலும், நட்டின் சூடு ஆணுறுப்பை தாக்காமல் இருக்க, தண்ணீர் தெளித்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்காதலி கொடூர கொலை; குடிபோதையில் நடந்த தகராறில் பயங்கரம்.!