காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கசந்த வாழ்க்கை; பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.!



Chennai Royapuram Lady cop Suicide 

 

சென்னையில் உள்ள ராயபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு துறையில் காவலராக வேலை பார்த்து வருபவர் பிரியங்கா (வயது 27). தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் (வயது 30) என்பவர், இதே காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறார். 

இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து காதலித்து, கடந்த ஜனவரி 24 அன்று திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: பிடிக்காத ஹெர் ஸ்டைல் காரணமாக சோகம்; 9 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.!

குடும்ப சண்டையில் சோகம்

நேற்று வழக்கம்போல தம்பதிகளுக்குள் சண்டை நடந்தபின், சேகர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்துபோன பிரியங்கா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவம் தணிந்ததும் வீட்டிற்கு வந்த பார்த்த சேகர், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

பெண் காவலரின் தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வயிற்று வலியால் நடந்த சோகம்; அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை.!