#Breaking: கணவன் கண்முன் மனைவி கத்திமுனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.!



in Tiruppur a Wife Raped by 3 Man Gang

வேலை தேடி வந்த இடத்தில் ஒரே மாநிலத்தை சேர்ந்த நபர்களால் பெண்ணுக்கு கணவன், குழந்தைகள் கண்முன் நடந்த துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருப்பூர் மாநிலத்தில் உள்ள அவிநாசி, தெக்கலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில், வேலை கேட்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி தனது கணவர், குழந்தைகளுடன் திருப்பூர் வந்திருந்தார். 

இவர்களுக்கு அந்நிறுவனத்தில் வேலை இல்லை என கூறப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் அவர்கள் பீகார் மாநிலத்திற்கே செல்ல முடிவெடுத்தனர். இதனையடுத்து, தம்பதிகள் தங்களின் குழந்தைகளுடன் திருப்பூர் இரயில் நிலையம் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: திருப்பூர்: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது.! 

அங்கு பாட்னா செல்லும் இரயிலுக்காக தம்பதிகள் காத்திருந்தபோது, இரயில் நிலையத்தில் 3 பேர் கொண்ட பீகாரி இளைஞர்கள் தம்பதியை கவனித்துள்ளனர். அவர்களிடம் பேசி வேலை வேண்டும் என்பதை புரிந்துகொண்டுள்ளனர்.

Tiruppur

கூட்டுப்பாலியல் வன்கொடுமை

இதனையடுத்து, தங்களின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்கள், தம்பதியை தங்களின் அறைக்கு அழைத்துச்சென்று உணவு கொடுத்துள்ளனர். 

பின் தங்களின் திட்டப்படி 3 பேர் கும்பல் கணவரை கட்டிப்போட்டு, அவரின் கண்முன்னே மனைவியை கத்தி முனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் எனவும் மிரட்டியுள்ளது. 

தப்பித்துவந்த தம்பதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த நவீன், டேனி, முன்சீத் ஆகியோரை கைது செய்தனர். இவர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: பிராங்க் பெயரில் மிரட்டல்.. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. வாட்சப்பில் ஆடியோ வெளியிட்டு சோகம்.!