5 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் மதுபோதையில் அதிர்ச்சி செயல்..!



in Madhya Pradesh 5 Year Old Child Girl Raped by Minor Boy 

 

16 வயதுடைய சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியிடம் அத்துமீறிய புகாரில் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டம், தினரா பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று சம்பவத்தன்று நடந்தது. அப்போது, திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற 16 வயது சிறுவன், மதுபோதையில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: நொடியில் களையிழந்த திருமண வைபோவம்.. மயங்கி சரிந்த மணமகனால் குடும்பத்தினர், உறவினர்கள் பரிதவிப்பு.! 

மயங்கி கிடந்த சிறுமி

அவர் அப்பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை கண்ட நிலையில், அவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வனொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி தனது வீட்டில் இருந்து சிறுது தொலைவில் ரத்தப்போக்குடன் மயனிய நிலையில் காணப்பட்டுள்ளார். 

Madhya pradesh

16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்

உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் 16 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது. 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 16 வயது சிறுவனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: புதுமணப்பெண்ணுக்கு சகோதரி வடிவில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மேடையில் நடந்த அசம்பாவிதம்.!