"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
கற்களால் தாக்கி நகை, செல்போன், பணம் பறிப்பு.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. 3 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், டேவிட் ராஜன் என்பவர் நேற்று இரவு நடந்து சென்றார். உறவினரை பார்க்க காஞ்சிபுரத்தை சார்ந்த ராஜன் (வயது 50) வந்திருந்த நிலையில், அவரின் மீது 3 பேர் தாக்குதல் நடத்தினர் .
ஒன்று சேர்ந்து தாக்குதல்
3 சிறார்கள் ஒன்று சேர்ந்து கல்லால் தாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், படுகாயமடைந்த டேவிட்டிடம் இருந்து கும்பல் செல்போன், நகை ஆகியவற்றை பறித்துச் சென்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த டேவிட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.4000 கொடுப்பா.. லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் அதிரடி கைது.!
3 பேர் கும்பல் கைது
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர், சிசிடிவி கேமிரா ஆதாரத்தின் பேரில் 3 சிறார்களை கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சிறார்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பேருந்துக்காக சென்றவரை கற்களை வீசி தாக்குதல் நடத்தி நகை, செல்போன், பணத்தை பறித்து வழிப்பறி செய்த சிறுவர்கள்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 20, 2025
பாதிக்கப்பட்ட டேவிட் ராஜன் அதிக மதுபோதையில் முன்னுக்கு பின் புறம்பான கருத்துக்களை தெரிவித்ததால் பணம் நகை குறித்து முழு விவரம் தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டு வருவதாக… pic.twitter.com/xRYtGbprFc
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து - வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி.!