20 ஆண்டுகளாக மனைவி, மகள், மாமியார் என யாரையும் விட்டுவைக்காத கொடுமை; 54 வயது நபரின் அதிர்ச்சி செயல்.! 



in Brazil Man Rapes Wife Daughter Mother In Law last 20 Years 


பிரேசில் நாட்டில் உள்ள நோவோ ஓரியென்ட் பகுதியில் 54 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதுடைய மனைவி, 7 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் பெண் குழந்தைக்கு 22 வயதும், கடைக்குட்டி பெண் குழந்தைக்கு 3 வயதும் ஆகிறது. 

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தினரை வீட்டிலேயே உறவினர்கள் கூட பார்க்க விடாமல் அடைத்து வைத்த 54 வயது நபர், 3 வயது பச்சிளம் குழந்தை முதல் 22 வயது இளம்பெண் வரை, தனது அனைத்து மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

Rape

காவல் நிலையத்தில் புகார்

மேலும், தனது மனைவியையும், மாமியாரையும் அவர் ஒருகட்டத்தில் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 20 ஆண்டுகளாக இக்கொடுமை தொடர்ந்த நிலையில், சமீபத்தில் இவர்களின் மகள் தந்தைக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இதையும் படிங்க: 9 வயது சிறுமி முதல் 44 வயது வரை பெண்கள் பலாத்காரம்; சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை.!

பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 54 வயது நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: 50 முறை பலவந்தப்படுத்தி பலாத்காரம்.. வயதுக்குவந்து 18 வயதுக்குள் ஆசிரமத்தில் நடந்த கொடுமை.!