இறந்த மனைவியின் உடலை 4 நாள் பிணவறையில் வைத்த கணவன்.. கண்ணீர் தரும் காரணம்.!



SRI LANKAN FATHER HIDING HIS WIFE DEATH TO HIS SON

தொடர் இருமல்

இலங்கையில் கடந்த மே 12ஆம் தேதி ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அதன் பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கிறார். அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்ட நிலையில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

தேர்வு முக்கியம்

Sri lanka

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். அந்த உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தாய் உயிரிழந்த தகவல் தெரிந்தால் மகன் சரிவர தேர்வு எழுத மாட்டான் என்று நினைத்த தந்தை மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணின் இறப்பை மறைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்.. துடிதுடித்து இறங்க சோகம்.!

Sri lanka

பிணவறையில் உடல்

எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி அந்த பெண்ணின் உடலை மருத்துவமனையின் பிணவறையில் வைத்திருந்து 4  நாட்களில் தேர்வு முடிந்த பின்னர் வீட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒரு எலுமிச்சை பழம் ரூ.100..! ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா.? எகிறும் விளையால் மக்கள் அவதி.!