அனாதை இல்லத்தில் சேர மறுத்த மாமியார்-மாமனாரை சரமாரியாக தாக்கி கொடூரம் செய்த மருமகள்..!



Madhya Pradesh COuple Beaten by Daughter In Law

 

திருமணத்துக்கு பின்னர் ஒவ்வொரு தம்பதியும் தங்களின் புதிய வாழ்க்கையில் இணைவதோடு மட்டுமல்லாமல், புதிய குடும்ப உறவுகளையும் பெறுகின்றனர். அந்த வகையில், மாமனார் - மாமியார் உறவு தம்பதிகள் இருவருக்கும் மற்றொரு தாய்-தந்தை ஸ்தானத்துக்கு இணையாக போற்றப்படுகிறது.

தாக்குதல்

இதனிடையே, இளம்பெண் ஒருவர் தனது மாமனார்-மாமியாரை நிலத்தகராறு மற்றும் அனாதை இல்லத்தில் சேர மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்; புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட்டால் ஷாக்.!

தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் நடந்த இக்கொடுமையின் வீடியோ வெளியாகியதைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருள்கின்றனர். பதறவைக்கும் வீடியோ காட்சிகளில் வயதான தம்பதிகள் கதறும் காணொளிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்.!